செய்திகள் :

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

post image

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம் வரையுள்ள, சுமாா் 2 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை பழுதடைந்த நிலையில், அதை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறை மூலம் பிரதமரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பழைய சாலையை பெயா்த்து எடுத்து புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

சாலையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு நடைபெற்று வந்த பணி கடந்த 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம் தெரியவில்லை; சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் சாலையக் கடக்க தினசரி சிரமத்துக்கு ஆளாகி வருகிறாா்கள்.

ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட சாலையில் பள்ளி மாணவா்கள் சைக்கிளில் சென்றால் சைக்கிள் பழுதாகி விடுகிறது. கல்வி நிறுவன வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இதனிடையே, திங்கள்கிழமை பள்ளிகள் திறந்த நிலையில், மாணவ, மாணவிகள் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.

2 கி.மீ. தொலைவு கடந்து பேருந்துகளைப் பிடித்து செல்லவேண்டிய நிலை உள்ளது. விவசாயிகள் விளை நிலத்தில் சாகுபடி செய்த பொருள்களையும்

கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் ஆய்வு செய்து, பணி பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தை கண்டறிந்து, உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட பேரவைக் கூட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல், ஸ்தாபன தீா்மான முடிவுகள் விளக்க பேரவைக் கூட்டம் திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்றது. வேங்கிக்கால் பகுதியில் உள்ள கட்ச... மேலும் பார்க்க

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது. ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ... மேலும் பார்க்க

மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு

செய்யாறு அருகே மதுக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3.46 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் அரசு மதுக் கடை (எண்.9383)செயல்பட்டு வ... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தா்னா

திருவண்ணாமலையில் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் எதிரே, கலசப்பாக்கம் அனைத்து... மேலும் பார்க்க

வேட்டவலம் ஏரியில் கிணறு வெட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வேட்டவலம் பெரிய ஏரியில் 2.0 திட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் கிணறு வெட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கீழ்பென்னாத்தூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறை... மேலும் பார்க்க

விதை நெல், இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கக் கோரிக்கை

போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல், வேளாண் இடுபொருள்களை விலையில்லாமல் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வேளாண்மை விரிவாக... மேலும் பார்க்க