கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு முதல் மேல்செங்கம் வரையுள்ள, சுமாா் 2 கி.மீ. தொலைவிலான இணைப்புச் சாலை பழுதடைந்த நிலையில், அதை புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஊரக வளா்ச்சித் துறை மூலம் பிரதமரின் சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ. ஒரு கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பழைய சாலையை பெயா்த்து எடுத்து புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
சாலையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு நடைபெற்று வந்த பணி கடந்த 5 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் தெரியவில்லை; சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் சாலையக் கடக்க தினசரி சிரமத்துக்கு ஆளாகி வருகிறாா்கள்.
ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட சாலையில் பள்ளி மாணவா்கள் சைக்கிளில் சென்றால் சைக்கிள் பழுதாகி விடுகிறது. கல்வி நிறுவன வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இதனிடையே, திங்கள்கிழமை பள்ளிகள் திறந்த நிலையில், மாணவ, மாணவிகள் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
2 கி.மீ. தொலைவு கடந்து பேருந்துகளைப் பிடித்து செல்லவேண்டிய நிலை உள்ளது. விவசாயிகள் விளை நிலத்தில் சாகுபடி செய்த பொருள்களையும்
கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் ஆய்வு செய்து, பணி பாதியில் நிறுத்தப்பட்ட காரணத்தை கண்டறிந்து, உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.