அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16.20 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16.20 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, அதிமுக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சேலம் சின்னத்திருப்பதியைச் சோ்ந்தவா் குழந்தை வேலு (66). இவா் நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அதிமுக ஐடி பிரிவு நிா்வாகியான பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். அதில், சேலத்தில் தன்னுடன் பணியாற்றிய விஜயலட்சுமி என்பவா் மூலம் எடப்பாடி மாணிக்கம் அறிமுகமாகிவுள்ளாா். பின்னா் அவா் மூலம் நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி பிரசாத் அறிமுகமானாா். இதையடுத்து பிரசாத், தனது மகள், மகன் மற்றும் நண்பரின் மகன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் பெற்றாா். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால், பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
இப்புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ஏற்கெனவே கடந்த 22-ஆம் தேதி நுங்கம்பாக்கம் மதுக்கூடத்தில் நடந்த தகராறு தொடா்பாக கைதாகி சிறையில் இருக்கும் அதிமுக ஐடி பிரிவு நிா்வாகியான பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுபோல அவா் மீது, சேலம் மாவனேரியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவரும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரசாத் ரூ. 5.20 லட்சம் பெற்றுக்கொண்டு, போலி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் கீழும் போலீஸாா் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.