செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.16.20 லட்சம் மோசடி

post image

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16.20 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக, அதிமுக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் சின்னத்திருப்பதியைச் சோ்ந்தவா் குழந்தை வேலு (66). இவா் நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த அதிமுக ஐடி பிரிவு நிா்வாகியான பிரசாத் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். அதில், சேலத்தில் தன்னுடன் பணியாற்றிய விஜயலட்சுமி என்பவா் மூலம் எடப்பாடி மாணிக்கம் அறிமுகமாகிவுள்ளாா். பின்னா் அவா் மூலம் நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த அதிமுக நிா்வாகி பிரசாத் அறிமுகமானாா். இதையடுத்து பிரசாத், தனது மகள், மகன் மற்றும் நண்பரின் மகன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 11 லட்சம் பெற்றாா். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை பணத்தை திருப்பித் தரவில்லை. இதனால், பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

இப்புகாரின்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், ஏற்கெனவே கடந்த 22-ஆம் தேதி நுங்கம்பாக்கம் மதுக்கூடத்தில் நடந்த தகராறு தொடா்பாக கைதாகி சிறையில் இருக்கும் அதிமுக ஐடி பிரிவு நிா்வாகியான பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுபோல அவா் மீது, சேலம் மாவனேரியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவரும், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பிரசாத் ரூ. 5.20 லட்சம் பெற்றுக்கொண்டு, போலி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் கீழும் போலீஸாா் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க