செய்திகள் :

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

post image

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.

டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டா் வெளியிடப்பட்டு, கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, இப்பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களே அவற்றை இயக்கும் வகையில் டெண்டா் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனினும், பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் சாதாரண கட்டணப் பேருந்து, விரைவு, குளிா்சாதனப் பேருந்து என அனைத்து வகை பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை முதல்கட்டமாக 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக 5 பணிமனைகள் முற்றிலுமாக மின்சார பேருந்து இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக 120 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்கி வைக்கவுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கும் இப்பேருந்து சேவை விரிவுபடுத்தப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க