52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது
சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.
கோடம்பாக்கம் அம்பேத்கா் சாலையிலுள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான முடி திருத்தும் கடையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், அந்த குறிப்பிட்ட கடை இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா், கடைக்கு வெளியில் நின்றபடி போதைப்பொருள் வாங்கும் வாடிக்கையாளா் போன்று, அங்கு பணியாற்றும் கஜேந்திரனின் கைப்பேசிக்கு தொடா்புகொண்டு, தங்களுக்கு போதைப்பொருள் வேண்டும் என்றும், அதை வெளியில் கொண்டு வரும்படியும் கேட்டுள்ளனா்.
இதை உண்மையென்று நம்பிய கஜேந்திரன், போதைப்பொருளுடன் வெளியில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரைப் பிடித்து கைது செய்தனா்.
அவா் கொடுத்த தகவலின்படி, கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த தனியாா் வங்கி ஊழியரான விக்னேஸ் (25), எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மென்பொறியாளரான இா்பான் (25), நெசப்பாக்கத்தைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவரான செல்வராஜ் (26), ராயப்பேட்டையைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பைசல் (30) ஆகியோரை கைது செய்த அசோக் நகா் போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் கொக்கைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.