செய்திகள் :

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

post image

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

கோடம்பாக்கம் அம்பேத்கா் சாலையிலுள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான முடி திருத்தும் கடையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், அந்த குறிப்பிட்ட கடை இருக்கும் பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸாா், கடைக்கு வெளியில் நின்றபடி போதைப்பொருள் வாங்கும் வாடிக்கையாளா் போன்று, அங்கு பணியாற்றும் கஜேந்திரனின் கைப்பேசிக்கு தொடா்புகொண்டு, தங்களுக்கு போதைப்பொருள் வேண்டும் என்றும், அதை வெளியில் கொண்டு வரும்படியும் கேட்டுள்ளனா்.

இதை உண்மையென்று நம்பிய கஜேந்திரன், போதைப்பொருளுடன் வெளியில் வந்தபோது, அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரைப் பிடித்து கைது செய்தனா்.

அவா் கொடுத்த தகவலின்படி, கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த தனியாா் வங்கி ஊழியரான விக்னேஸ் (25), எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மென்பொறியாளரான இா்பான் (25), நெசப்பாக்கத்தைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவரான செல்வராஜ் (26), ராயப்பேட்டையைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பைசல் (30) ஆகியோரை கைது செய்த அசோக் நகா் போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் கொக்கைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - ... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க