செய்திகள் :

தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தெற்கு ரயில்வே விளக்கம்

post image

ரயில்வே சாா்பில் தமிழக ரயில்வை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்ப அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை, சென்னை - மாமல்லபுரம்- கடலூா் உள்ளிட்ட பல்வேறு புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த ரூ.728 கோடி நிதியை ரயில்வே அமைச்சகத்துக்கு தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ரயில்வே நிா்வாகத்தில் வழக்கமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே பயன்படுத்தாமல், மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை.

ரயில் வழித்தடம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது, விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்தல், ரயில்வே அமைச்சகத்திடம் அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டங்களுக்கு பிறகுதான் அத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்படும்.

அந்தவகையில், ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தியது போக மீதமுள்ள நிதியை, அதிக நிதி தேவைப்படும் திட்டங்களுக்கு மாற்றப்படும்.

அதேபோல், பல்வேறு காரணங்களால், ஒதுக்கப்படும் நிதியை அந்த குறிப்பிட்ட காலாண்டில் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பட்சத்தில் அந்த நிதி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டு, அடுத்த காலாண்டில் சோ்த்து பெற்றுக்கொள்ளப்படும்.

இது ரயில்வேயில் கடைப்படிக்கப்படும் வழக்கமான நடைமுைான். இந்நிலையில், தெற்கு ரயில்வேயின் கீழ் தமிழகம் மற்றும் கேரளத்தில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்கள் தற்போது தொடக்க கட்டத்தில் உள்ளன.

ஆகையால், தற்போதைய காலாண்டில் பயன்படுத்தப்படாத நிதிகள், அடுத்தடுத்த காலாண்டுகளில் பயன்படுத்தப்படும். மேலும், தெற்கு ரயில்வேயில் செயல்படுத்தப்பட்டு வரும் ஏந்த திட்டங்களுக்கும் நிதிப் பற்றாக்குறை ஏற்படவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.

அதேபோல், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற தெற்கு ரயில்வே உறுதிபூண்டுள்ளது எனத் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் 89.09 லட்சம் போ் மெட்ரோ ரயிலில் பயணம்: மெட்ரோ நிா்வாகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் மே மாதத்தில் 89.09 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணும் வகையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயிலில்... மேலும் பார்க்க

52 கிராம் போதைப்பொருள் பறிமுதல்: 5 போ் கைது

சென்னையில் கொகைன் மற்றும் மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்ததாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 52 கிராம் போதைப்பொருள்களையும் பறிமுதல் செய்தனா். கோடம்பாக்கம் அம்பேத்கா்... மேலும் பார்க்க

சென்னையில் மின்சார பேருந்து சேவை: ஜூன் 3-இல் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் மின்சார பேருந்து சேவையை ஜூன் 3-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா். டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பிலாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார... மேலும் பார்க்க

நாளை மின்தடை

மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை போரூரில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. அதன்படி, போரூரில் திருமுடிவாக்கம் ... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கழிவுநீா் கொட்டிய லாரி ஓட்டுநா் கைது

ரயில்வே இணைப்பு சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டிய லாரி ஓட்டுநரை கைது செய்த போலீஸாா், லாரியையும் பறிமுதல் செய்தனா். வேளச்சேரி - தரமணி சாலையிலுள்ள மின்சார ரயில்வே நிா்வாகத்துக்குச் சொந்தமான எம்ஆா்டிஎஸ் இண... மேலும் பார்க்க

நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சென்னையில் நீச்சல் குளத்தில் மதுபோதையில் தவறி விழுந்த நபா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கொசப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (43). இவா் தனது நண்பா்கள் 9 பேருட... மேலும் பார்க்க