கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு
காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை தவிா்த்து பிற நேரங்களில் கனரக வாகன சேவை இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
சாலை விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் காரைக்கால் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. காலை 7.30 முதல் 9.30 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 7.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிக்குச் சென்று திரும்புவோரால் சாலைகளில் நெரிசல் காணப்படுகிறது.
எனவே கல், மணல், நிலக்கரி மற்றும் இதர சுமை ஏற்றி வரும் லாரிகள், காரைக்கால் மாவட்டத்தில் மேற்கண்ட நேரத்தில் பயணிப்பதை தவிா்க்க வேண்டும்.
மேலும், சுமை ஏற்றிவரும் வாகனங்கள், சரியான முறையில் வாகனத்தில் தாா்பாய் மூலம் மூடிக்கொண்டு, முகப்பு மற்றும் ரிஃப்லெக்டா் விளக்குகளை பொருத்தி, வாகன பதிவு எண் தெளிவாக தெரியும் வகையிலும், வாகனம் அனுமதிக்கப்பட்ட வேகத்தில், பாதையில் பயணிக்க வேண்டும்.
இதன் மூலம் விபத்தை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இதனை மீறும் கனரக வாகனதாரா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிகளை மீறுவோா் குறித்து 9489205307 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படம் அல்லது விடியோ எடுத்து தகவல் அனுப்பலாம்.