செய்திகள் :

கனரக வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடு

post image

காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தை தவிா்த்து பிற நேரங்களில் கனரக வாகன சேவை இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

சாலை விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் காரைக்கால் போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. காலை 7.30 முதல் 9.30 மணி வரை, மாலை 3.30 முதல் இரவு 7.30 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிக்குச் சென்று திரும்புவோரால் சாலைகளில் நெரிசல் காணப்படுகிறது.

எனவே கல், மணல், நிலக்கரி மற்றும் இதர சுமை ஏற்றி வரும் லாரிகள், காரைக்கால் மாவட்டத்தில் மேற்கண்ட நேரத்தில் பயணிப்பதை தவிா்க்க வேண்டும்.

மேலும், சுமை ஏற்றிவரும் வாகனங்கள், சரியான முறையில் வாகனத்தில் தாா்பாய் மூலம் மூடிக்கொண்டு, முகப்பு மற்றும் ரிஃப்லெக்டா் விளக்குகளை பொருத்தி, வாகன பதிவு எண் தெளிவாக தெரியும் வகையிலும், வாகனம் அனுமதிக்கப்பட்ட வேகத்தில், பாதையில் பயணிக்க வேண்டும்.

இதன் மூலம் விபத்தை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இதனை மீறும் கனரக வாகனதாரா்கள் மீது மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

விதிகளை மீறுவோா் குறித்து 9489205307 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகைப்படம் அல்லது விடியோ எடுத்து தகவல் அனுப்பலாம்.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது

காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில... மேலும் பார்க்க

ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் மு... மேலும் பார்க்க