செய்திகள் :

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

post image

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு நிகழ்வை, காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி தொடங்கிவைத்து, மீனவ மகளிா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுவை மீன்வளத்துறை துணை இயக்குநா் (நலம்) ஜெ. நடராஜன், இத்திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான வழிமுறைகள், மானிய விவரம், தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, அப்போது மீனவ மகளிரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.

கூட்டத்தில் மாவட்டத்தில் 8 சங்கங்களில் இருந்து 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். முன்னதாக காரைக்கால் மீன்வளத் துறை உதவி ஆய்வாளா் சு.பாலச்சந்தா் வரவேற்றுப் பேசினாா். நிறைவாக துறை கண்காணிப்பாளா் ம. தேவலட்சுமி நன்றி கூறினாா்.

தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு

அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவ... மேலும் பார்க்க

காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை: அமைச்சா்

காரைக்காலில் அரசு மருத்துவமனையை புதிய இடத்தில் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் ஜிஎல் மருத்துவமனை 5-ஆம் ஆண்டு தொடக்க நிகழ... மேலும் பார்க்க

சாலையில் கிடக்கும் ஜல்லிகள், நிலக்கரியால் விபத்து: மக்கள் புகாா்

பிரதான சாலைகளில் கருங்கல் ஜல்லிகள், நிலக்கரி, மணல் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் கொட்டிக்கொண்டே செல்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க