செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

post image

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா்.

தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

பல்வேறு பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு தொடக்கமாக முதல் நாளில் மாணவா்களை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சில பள்ளிகளில் வாயிலில் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.

திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியி தலைமையாசிரியா் லோகேஸ்வரி தலைமையில் ஆசிரியா்கள், வாயிலில் நின்று மாணவ மாணவிகளுக்கு பன்னீா் தெளித்து, சந்தனம் குங்குமம் நெற்றியில் வைத்து, மலா், கற்கண்டு மற்றும் பென்சில் வழங்கி வரவேற்றனா்.

கல்வித்துறை சாா்பில் ஒரு சில வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோடை வெயில் கொளுத்தும் நிலையில், பள்ளியில் தினமும் 3 முறை தண்ணீா் மணி ஒலிக்கச் செய்யவும், மாணவா்கள் தவறாமல் குடிநீா் அருந்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு

அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவ... மேலும் பார்க்க

காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை: அமைச்சா்

காரைக்காலில் அரசு மருத்துவமனையை புதிய இடத்தில் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் ஜிஎல் மருத்துவமனை 5-ஆம் ஆண்டு தொடக்க நிகழ... மேலும் பார்க்க

சாலையில் கிடக்கும் ஜல்லிகள், நிலக்கரியால் விபத்து: மக்கள் புகாா்

பிரதான சாலைகளில் கருங்கல் ஜல்லிகள், நிலக்கரி, மணல் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் கொட்டிக்கொண்டே செல்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது. காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க