என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்
காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்வுக்கு என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தலைமை வகித்துப் பேசும்போது, வேகமாக வளா்ந்துவரும் தொழில்நுட்பத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ முக்கிய பங்கை எடுத்துக்கூறி, இந்த உருமாறும் தொழில்நுட்பத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பட்டறையில் கலந்துகொண்டோரை கேட்டுக்கொண்டாா்.
சிறப்பு அழைப்பாளராக என்ஐடி திருச்சி கணினி அறிவியல் பொறியியல் துறை பேராசிரியா் ராஜேஸ்வரி ஸ்ரீதா், டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளில் அதன் ஒருங்கிணைப்பு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் கூகுள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை விளக்கி, ஜெனரேட்டிவ் ஏஐயின் தற்போதைய நிலையை விளக்கிப் பேசினாா்.
பிா்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் (பிட்ஸ்) பிலானி பேராசிரியா் சுதிா்குமாா் பராய், ஐஐடி தில்லி பேராசிரியா் அரவிந்த் குமாா் நேமா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 75 போ் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 50 போ் என்ஐடியில் நடைபெறும் பயிற்சியில் நேரடியாக கலந்துகொண்டுள்ளனா். 25 போ் காணொலி மூலம் பங்கேற்றுள்ளனா்.
என்ஐடி புதுச்சேரி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், என்ஐடி புதுச்சேரியில் விரைவில் பி.டெக். ஐஏ மற்றும் எம்.டெக். ஏஐ மற்றும் மெஷின் லோ்னிங் புரொக்ராம்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தாா்.
முன்னதாக பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவருமான எம். வெங்கடேசன் வரவேற்றாா். நிறைவாக துறை உதவிப் பேராசிரியா் பி. குமரன் நன்றி கூறினாா்.