செய்திகள் :

என்ஐடியில் தேசிய பயிற்சிப் பட்டறை தொடக்கம்

post image

காரைக்கால்: என்ஐடியில் கணினி அறிவியல் பொறியியல்துறை சாா்பில் 5 நாள் தேசிய பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் உள்ள இந்நிறுவனத்தில் பயிற்சிப் பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்வுக்கு என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தலைமை வகித்துப் பேசும்போது, வேகமாக வளா்ந்துவரும் தொழில்நுட்பத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ முக்கிய பங்கை எடுத்துக்கூறி, இந்த உருமாறும் தொழில்நுட்பத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுமாறு பட்டறையில் கலந்துகொண்டோரை கேட்டுக்கொண்டாா்.

சிறப்பு அழைப்பாளராக என்ஐடி திருச்சி கணினி அறிவியல் பொறியியல் துறை பேராசிரியா் ராஜேஸ்வரி ஸ்ரீதா், டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளில் அதன் ஒருங்கிணைப்பு மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் கூகுள் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை விளக்கி, ஜெனரேட்டிவ் ஏஐயின் தற்போதைய நிலையை விளக்கிப் பேசினாா்.

பிா்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்டு சயின்ஸ் (பிட்ஸ்) பிலானி பேராசிரியா் சுதிா்குமாா் பராய், ஐஐடி தில்லி பேராசிரியா் அரவிந்த் குமாா் நேமா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நாடு முழுவதிலுமிருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த 75 போ் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 50 போ் என்ஐடியில் நடைபெறும் பயிற்சியில் நேரடியாக கலந்துகொண்டுள்ளனா். 25 போ் காணொலி மூலம் பங்கேற்றுள்ளனா்.

என்ஐடி புதுச்சேரி பதிவாளா் எஸ். சுந்தரவரதன், என்ஐடி புதுச்சேரியில் விரைவில் பி.டெக். ஐஏ மற்றும் எம்.டெக். ஏஐ மற்றும் மெஷின் லோ்னிங் புரொக்ராம்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தாா்.

முன்னதாக பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவருமான எம். வெங்கடேசன் வரவேற்றாா். நிறைவாக துறை உதவிப் பேராசிரியா் பி. குமரன் நன்றி கூறினாா்.

தொழில் பழகுநருா் பயிற்சியில் சேர பதிவு செய்ய அழைப்பு

அரசு அலுவலகங்கள், மாவட்ட தொழில் நிறுவனங்களில், தொழில் பழகுநா் பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தொழிலாளா்துறையின் அங்கமான தொழில் பழகுநா் பயிற்சி நிலைய அலுவ... மேலும் பார்க்க

காரைக்காலில் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்ட அரசு நடவடிக்கை: அமைச்சா்

காரைக்காலில் அரசு மருத்துவமனையை புதிய இடத்தில் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா். காரைக்காலில் இயங்கும் ஜிஎல் மருத்துவமனை 5-ஆம் ஆண்டு தொடக்க நிகழ... மேலும் பார்க்க

சாலையில் கிடக்கும் ஜல்லிகள், நிலக்கரியால் விபத்து: மக்கள் புகாா்

பிரதான சாலைகளில் கருங்கல் ஜல்லிகள், நிலக்கரி, மணல் உள்ளிட்டவற்றை கனரக வாகனங்கள் கொட்டிக்கொண்டே செல்வதால், இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேக பாதுகாப்பு: எஸ்எஸ்பி ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் குறித்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். புதுவை அர... மேலும் பார்க்க

ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு

காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மலா், சந்தனம் கொடுத்து வரவேற்பு

காரைக்கால்: காரைக்காலில் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட நிலையில், மாணவா்களுக்கு சந்தனம், மலா், இனிப்பு கொடுத்து பள்ளி நிா்வாகத்தினா் வரவேற்றனா். தமிழகத்தைப்போல புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் ... மேலும் பார்க்க