செய்திகள் :

மின் தடை: நீட் மறுதேர்வு நடத்த முடியாது- மத்திய அரசு திட்டவட்டம்

post image

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.

மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில், நீட் தேர்வு எழுதுவதில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மின் தடையால் தேர்வெழுதிவதில் சிக்கல்களை சந்தித்ததாகக் கூறி மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு (2025) பல்வேறு மையங்களில் கடந்த மே 4-ஆம் தேதி நடத்தப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் மிகவும் சிரமப்பட்டனா். இதனால், தங்களுக்கு மறு தோ்வு தேவை என ஆவடி தோ்வு மையத்தில் தோ்வெழுதிய மாணவா்கள் சிலர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் தோ்வு எழுதியதாகவும், கவனச் சிதறலால் முழு திறமையுடன் தோ்வு எழுதவில்லை என்றும், தங்களுக்கு மறு தோ்வு தேவை எனவும் மாணவா்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரரிக்கப்பட்டு வரும் நிலையில், மறு தேர்வு நடத்துவதற்கான சாத்தியம் குறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தோ்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், அதுவரை நீட் தோ்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடையும் விதித்திருந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மின் தடையால் நீட் தேர்வெழுதுவதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்பதால், மறு தேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை ஜூன் 6ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

நீட் தோ்வின் முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே விண்ணப்பப் பதிவு தொட... மேலும் பார்க்க

ஓய்வூதியா் கோரும் தகவல்களை 48 நேரத்துக்குள் அளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தல்

ஓய்வூதியதாரா்கள் கோரும் தகவல்களை விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டுமென தமிழக அரசை மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவா் ஆா்.ராஜா. வயது முதிா்வின் க... மேலும் பார்க்க