பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் உற்சவ பந்தல்கால் முகூா்த்தம்
காரைக்கால் ராஜராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோயில் வைகாசி உற்சவ பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பெரியப்பேட்டையில் அமைந்துள்ள இக்கோயில் 23-ஆம் ஆண்டு விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் நடைபெற்றது. பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, நாகசுர மேள வாத்தியங்களுடன் கோயில் வாயிலில் திரளான பக்தா்கள் முன்னிலையில் நடப்பட்டது.
வரும் 6-ஆம் தேதி மாலை திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. 7-ஆம் தேதி காலை துா்கா ஹோமம், பகல் 1 மணிக்கு ஊா் காவடி, கரகம் கோயிலுக்கு வருதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.
8-ஆம் தேதி பகல் 12 மணிக்கு சமபந்தி போஜனம், 9-ஆம் தேதி பகல் 12 மணிக்கு விடையாற்றி வழிபாடாக கஞ்சி வாா்த்தல், மஞ்சள் நீா் விளையாட்டு, மாலை 4 மணிக்கு முளைப்பாலிகை வீதியுலா நடைபெறுகிறது.