செய்திகள் :

சர்வதேச விரிவாக்கத்திற்காக 30 ஏ-350 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ!

post image

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, 30 ஏர்பஸ் ஏ350-900 விமானங்களை நாட்டின் நீண்ட கால சர்வதேச விரிவாக்கத்திற்கான முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், விமான நிறுவனம் 30 ஏர்பஸ் ஏ350 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்கியது.

தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ், 70 விமானங்களுக்கான ஆர்டர் இருக்கும் நிலையில், இப்போது 30 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்குவதாக தெரிவித்தார். அதே வேளையில், விமான நிறுவனம் வரும் ஆண்டுகளில் 900 க்கும் மேற்பட்ட விமானங்களை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது என்றது.

2030 ஆம் ஆண்டுக்குள் 600 க்கும் மேற்பட்ட விமானங்களை வைத்திருக்க வேண்டும், அதே வேளையில் உலகளாவிய விமான நிறுவனமாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன், இண்டிகோ, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க ஆகிய இடங்களுக்கு மேம்பட்ட இணைப்பை வழங்க உறுதி பூண்டுள்ளது.

உலக விமானப் போக்குவரத்து உச்சிமாநாட்டின், இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் ஆர்டரை 30ல் இருந்து 60 ஆக உயர்த்தியது.

இண்டிகோ மார்ச் 2026ல் முடிவடையும் நிதியாண்டில் குத்தகைக்கு எடுக்கும் போயிங் 787 விமானங்களை, 10 புதிய நகரங்களுக்கு இயக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்போது ​​430 க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ள நிலையில் சுமார் 2,300 தினசரி விமானங்களை இயக்கியும் வருகிறது.

இதையும் படிக்க: டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

கொல்கத்தா: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை 56 சதவிகிதம் குறையும் என... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (திங்கள்கிழமை) 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக நிலைபெற்றது. இதற்கு டாலர் பலவீனமாக இருப்பதும், ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் ம... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: உலகளாவிய சந்தைகளில் மந்தமான போக்குகளைத் தொடர்ந்ததால் இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.ரஷ்ய-உக்ரைன் மோதல், பிரெண்ட் கச்சா எண்... மேலும் பார்க்க

மே மாத யுபிஐ பணப்பரிமாற்றம்! இனிமே கையில் காசே இருக்காதா?

கடந்த ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாத யுபிஐ பணப்பரிமாற்றம் அதிகரித்திருந்தாலும், மறுபக்கம் பணப்புழக்கமும் அதே வேகத்தில்தான் இருக்கிறது என்கின்றன தரவுகள்.கடந்த மே மாதம், நாடு முழுவதும் யுபிஐ எனப்படு... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,214.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11:... மேலும் பார்க்க

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கி

கனரா வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுகிறது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக வங்கிகளில... மேலும் பார்க்க