சரிவில் பங்குச் சந்தை! 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,214.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11:45 மணி நிலவரப்படி 437.21 புள்ளிகள் குறைந்து 81,017.77 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு முன்னதாக 700 புள்ளிகள் வரை சென்செக்ஸ் குறைந்தது.
அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 112.70 புள்ளிகள் குறைந்து 24,638.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸில் ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்துள்ளன. ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன. பெரும்பாலான வங்கிகள் இன்று அதிக லாபமடைந்துள்ளன.
உலோகங்கள் மீதான அமெரிக்காவின் வரி, உலகளாவிய வர்த்தகப் போர் பதற்றங்களினால் பங்குச் சந்தை சரிந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகளவில் தென் கொரியா, ஜப்பான், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகளும் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன.