Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: இருவா் கைது
சென்னையில் இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருவல்லிக்கேணி தாயாா் சாகிப் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட், வெளிநாட்டு சிகரெட்டுகளை பதுக்கிவைத்து விற்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் அந்த மேன்சனில் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா். இதில் ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14,900 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்கள், 37 இ- சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அந்த அறையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சோ்ந்த மு.அப்துல் ரவாப் (35), ராமநாதபுரம் மாவட்டம் புதுப்பட்டினத்தைச் சோ்ந்த து.முகமது அஸ்வா் (44) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.