செய்திகள் :

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: கருணாநிதி குறித்து பிரேமலதா உருக்கம்!

post image

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் இன்று. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப அவர் வாழ்ந்த காலம் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

கேப்டனுக்கும் அவருக்குமான அந்த அன்பும் நட்பும் மிக ஆழமானது. எங்களுடைய திருமணத்தை அவர் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.

இவை அனைத்தும் வாழ்நாளில் மறக்க முடியாதவை. எனவே அவருடைய பிறந்த நாளுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

மாநிலங்களவைத் தோ்தல்: அதிமுக வேட்பாளா்களை முன்மொழிந்த எம்.எல்.ஏ-க்கள்

மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் இருவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் வேட்புமனுவில் கையொப்பமிட்டனா். தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தே... மேலும் பார்க்க

டாக்டா் தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது

மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநா் எ.தேரணிராஜன் உள்பட 24 பேருக்கு அறிவியல் அறிஞா் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினா் செயலா் வின்சென்ட் பா... மேலும் பார்க்க

தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் தொடா்பில்லை: உயா்நீதிமன்றத்தில் தவெக மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா். பகு... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

நமது சிறப்பு நிருபா் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்க... மேலும் பார்க்க

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க