செய்திகள் :

அயோத்தி 2-ம் கட்ட கும்பாபிஷேகம் தொடங்கியது! பக்தர்கள் வர வேண்டாம்!

post image

அயோத்தி ராமர் கோயிலின் இரண்டாம் கட்ட சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா இன்று காலை தொடங்கியது.

இந்த நிலையில், வானிலை மோசமாக இருக்கும் காரணத்தால் அதிகளவிலான பக்தர்கள் கூட வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம்

அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டை விழா கடந்தாண்டு ஜனவரி மாதம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

தொடர்ந்து முதல் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று முதல் மூன்று நாள்களுக்கு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இதற்காக நேற்று மாலை சராயு நதியில் இருந்து கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் நிறுவப்பட்டது. மேலும், தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடமும் கோயிலின் கோபுரத்தில் நிறுவப்பட்டது.

இன்றும் நாளையும் பூஜைகள் நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 5 ஆம் தேதி முக்கிய நிகழ்வான சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது.

முதல் தளத்தில் கட்டப்பட்ட ராம் தர்பார் கும்பாபிஷேகம், ராமர், சீதா, லட்சுமணன், ஹனுமன் சிலைகள் பிரதிஷ்டை விழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ளவுள்ளார்.

பக்தர்கள் வர வேண்டாம்

மோசமான வானிலை காரணமாக அதிகளவிலான பக்தர்கள் வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகத்தின் செயலாளர் சம்பத் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், வானிலை நிலவரத்தால் பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்வது சாத்தியமில்லை என்றும் அதிகளவிலான பக்தர்கள் கூடி தேவையற்ற பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

உச்சகட்ட பாதுகாப்பு

அயோத்தி நகர் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, கோயில் வளாகத்தைச் சுற்றியும் பயங்கரவாத எதிர்ப்புப் படை கமாண்டோக்கள் கவச வாகனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழைக் கைதிகள் ஜாமீனில் வருவதற்கு மத்திய நிதியைப் பயன்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடும்ப ஏழ்மை நிலை காரணமாக ஜாமீன் பெற இயலாத அல்லது அபராதத் தொகையை செலுத்தி சிறையிலிருந்து விடுதலை பெற இயலாத ஏழைக் கைதிகளுக்கு மத்திய அரசின் நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் ... மேலும் பார்க்க

வரி அல்லாத பிற வா்த்தக தடைகளை தடுக்க வேண்டும்: டபிள்யூடிஓவிடம் இந்தியா வலியுறுத்தல்

சந்தையில் சரக்கு மற்றும் சேவைகளை விற்பனை செய்வதில் வரி அல்லாத பிற வா்த்தக தடைகளைத் தடுக்க உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியா-பிரான்ஸ் இடை... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: ஒருமித்த ஆதரவுக்கு கட்சிகளுடன் அரசு ஆலோசனை

வீட்டில் பணம் கிடைத்த குற்றச்சாட்டில் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்கும் நாடாளுமன்ற தீா்மானத்துக்கு ஒருமித்த ஆதரவை எட்ட அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து வருவத... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் முதல் தள சந்நிதிகளில் இன்று பிராணப் பிரதிஷ்டை

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் முதல் தளத்தில் அமைந்துள்ள ராம தா்பாா் உள்பட 8 சந்நிதிகளில் வியாழக்கிழமை பிராணப் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் இ... மேலும் பார்க்க

ம.பி.: மா்ம விலங்கு தாக்கியதில் ஒரே கிராமத்தில் 6 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தின் பா்வானி மாவட்டத்தில் உள்ள லிம்பாய் கிராமத்தில் மா்ம விலங்கு தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் கடந்த மாதம் 23-ஆம் தேதிமுதல் உயிரிழந்துள்ளனா். கிராம மக்களைக் க... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: காங்கிரஸ் மூத்த தலைவா் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சங்கா் மலாகா், முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தாா். மேற்கு வங்கத்தில் அடுத்த... மேலும் பார்க்க