செய்திகள் :

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கி

post image

கனரா வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுகிறது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.

பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது.

இது ஏழை,எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் இவ்வாறு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் பணம் அனைத்தும் காலியாகும் நிலையும் உருவானது.

இந்நிலையில், சேமிப்புக் கணக்குகள், சம்பள கணக்குகள், வெளிநாடுவாழ் இந்தியா் சேமிப்புக் கணக்குகள் என அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டுவந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது.

பொதுத் துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது. அந்த வரிசையில் மற்றொரு பொதுத் துறை வங்கியான கனரா வங்கியும் இணைந்துள்ளது. வரும் நாள்களில் வேறு பல வங்கிகளும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

சென்னை: இந்தியன் ஆயில் குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் வைர விழா ஆண்டை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டு... மேலும் பார்க்க

அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் இன்று அதன் மின்சார வாகன வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது மின்சார எஸ்யூவி-யான ஹாரியர்.இவி-ஐ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது 500 கி.மீ. அதிகமான வரம்பைக் கொண்டுள்ளதாக... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 பைசா குறைந்து 85.60 ஆக முடிவடைந்தது. நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் உள்ளூர் பங்குச் சந்தைகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில... மேலும் பார்க்க

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறனுடன் ரெட்மி பேட் 2!

ஷாவ்மியின் துணை நிறுவனமான ரெட்மியின் பேட் 2 (Pad 2) ஆண்ட்ராய்டு டேப்லட்டின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி பேட் மாடலின் அடுத்த வரிசையாக 4 ஜி ... மேலும் பார்க்க

நிஃப்டி 0.74% சரிவு; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளின் பங்குகள் இன்றைய பங்கு வர்த்தகத்தின்போது பின்னடைவை சந்தித்ததன் எதிரொலியாக, நிஃப்டி மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.சென்செக்ஸ் 363.24 புள்ளிகள் அதாவது 0.... மேலும் பார்க்க