வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிட இளைஞா்களுக்கு பயிற்சி
சிக்கிம் நிலச்சரிவு: மாயமான வீரர்களைத் தேடும் பணி தீவிரம்! களமிறங்கியது தேசிய படை!
சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த ராணுவ முகாமில், மாயமான வீரர்களைத் தேட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால், சிக்கிமின் லாச்சென் மாவட்டத்தில், கடந்த ஜூன் 1 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் முற்றிலும் மண்ணுக்குள் புதைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், 3 ராணுவ வீரர்கள் பலியான நிலையில் 4 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும், மாயமான 6 வீரர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 23 வீரர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் செயற்கைகோள் செல்போன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இப்படையின் வீரர்கள் மாயமானவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுவதுன், தற்காலிக தொடர்புகளை உண்டாக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:மணிப்பூரில் வெள்ளம்: 56,000 பேர் பாதிப்பு; 10,477 வீடுகள் சேதம்!