செய்திகள் :

IPL Playoffs: 'அகமதாபாத்தில் மழை; ஆட்டம் என்னவாகும்?' -விதிகள் என்ன சொல்கிறது?

post image

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. போட்டிக்கான டாஸ் மட்டுமே போடப்பட்டிருக்கும் நிலையில் அஹமதாபாத்தில் மழை பெய்து வருகிறது. ஒரு வேளை மழை அப்படியே தொடர்ந்து போட்டி கைவிடப்பட்டால் என்ன நடக்கும்?

IPL Playoffs - Rain
IPL Playoffs - Rain

ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் இறுதிப்போட்டிக்கு மட்டுமே ரிசர்வே டே உண்டு. அதாவது இறுதிப்போட்டி மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டால் மறுநாள் மீண்டும் போட்டியை நடத்துவார்கள். இறுதிப்போட்டியை தவிர மற்றப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே கிடையாது.

இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியை பொறுத்தவரைக்கும் 2 மணி நேரம் கூடுதலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது போட்டி 7:30 மணிக்கு தொடங்க வேண்டும் இல்லையா? மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் 9:30 மணி வரைக்குமே ஓவர்களை குறைக்கவே மாட்டார்கள். 9:30 மண்க்கு போட்டி தொடங்கினாலும் முழுமையாக 20 ஓவர் போட்டியாக நடந்துவிடும். 9:30 க்குள் போட்டியை தொடங்க முடியாவிடில் அடுத்த ஒவ்விரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் குறைந்துகொண்டே வரும்.

PBKS vs MI
PBKS vs MI

கடைசியாக 11:56 மணிதான் Cut Off Time. 11:56 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்திவிட முடியும். 11:56 மணியையும் கடந்துவிட்டால் அவ்வளவுதான். போட்டி கைவிடப்படும். ஒருவேளை போட்டி ஆரம்பித்து இடையில் மழை பெய்து போட்டியை அதற்கு மேல் தொடர முடியாவிடிலும் போட்டி கைவிடப்படும். DLS முறையில் ரிசல்ட்டை கொண்டு வர இரண்டு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது பேட்டிங் ஆடியிருக்க வேண்டும்.

இந்த பஞ்சாப் Vs மும்பை போட்டி கைவிடப்பட்டால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். புள்ளிப்பட்டியலில் 19 புள்ளிகளோடு முதலிடத்திலும் மும்பை 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

RCB vs PBKS Final: அந்த அணி கோப்பை வெல்லவே அதிக வாய்ப்பு; உறுதியாகக் கூறும் ChatGPT, Grok, Gemini

ஐபிஎல் வரலாற்றில் 17 சீசன்களாகக் கோப்பையை வெல்லாத மூன்று அணிகளில் ஒரு அணி முதல்முறையாகக் கோப்பை ஏந்தப்போகிறது.2014 பிறகு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் பஞ்சாப்பும், 2016... மேலும் பார்க்க

RCB vs PBKS Final: ``கோலியால் முடியுமென்றால் ஸ்ரேயஸாலும் முடியும்; ஆனால்..'' - யுவராஜ் தந்தை கணிப்பு

நடப்பு ஐ.பி.எல் சீசனானது, 17 வருடங்களாகக் கோப்பையே வெல்லாத ஒரு புதிய சாம்பியனை அறிமுகப்படுத்தவிருக்கிறது.புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி 4-வது முறையாகவும், சாம்பியன் கேப்டன் ஸ்ரேயஸ் ... மேலும் பார்க்க

IPL 2025 Final: "மனவேதனையைத் தரும்" - ஷ்ரேயஸ், கோலி... யாருக்கு ஆதரவு? ராஜமௌலி ஓப்பன் டாக்

நாளை (02.06.2025) IPL 2025 சீசனின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதும் இந்த போட்டிக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இறுதிப்போட்டியில் க... மேலும் பார்க்க

Maxwell: ``அணியை ஏமாற்றுவதுபோல் உணர்ந்தேன்'' - ODI போட்டியிலிருந்து விடைபெற்றார் உலகக் கோப்பை நாயகன்

சமகால கிரிக்கெட்டில் ஓயிட் பால் ஃபார்மெட்டில் எந்த நேரத்திலும் வெற்றியைத் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு அசாத்திய வீரர் ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்.2023 ஒருநாள் உலகக் கோப்பையில், ஆப்கானிஸ்தானுடன் லீக்... மேலும் பார்க்க

Shreyas Iyer : `ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இல்லை; தலைவன்!' - ஏன் தெரியுமா?

'பஞ்சாபின் வரலாற்றை மாற்றிய ஸ்ரேயாஸ்!'11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. அந்த அணியின் நீண்ட நாள் ஏக்கத்தை, கனவை ஸ்ரேயாஸ் ஐயர் தீர்த்திருக்கிறார். பெரு வெற்றி... மேலும் பார்க்க

Mumbai Indians: "அப்படிச் செய்திருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்" - ஹர்திக் சொல்வதென்ன?

அகமதாபாத் மைதானத்தில் ஸ்ரேயஸ் தலைமையிலான பஞ்சாப் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான குவாலியர் 2-ல் நேற்று (ஜூன் 1) மோதின.டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ர... மேலும் பார்க்க