செய்திகள் :

விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய விமானங்கள் வீழ்ந்தன!

post image

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான விடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன.

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய தாக்குதலில் சிறுமி உள்பட இருவர் கொல்லப்பட்டனர்.

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் முடிவின்றி தொடர்ந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், போர் முடிவை எட்டவில்லை.

இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்தச் சூழலில் நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷியா 100 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷியாவின் விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் 40 விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கான விடியோக்கள் காட்சிகள் தற்போது இணையத்தில் வைராகி வருகின்றன.

ரஷிய விமானப்படைத் தளங்களை நீண்ட தூர ஏவுகணைகளை வீசும் Tu-95 மற்றும் Tu-22 போர் விமானங்கள் மூலம் வீசி உக்ரேனியப் படைகள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால், போர் தொடங்கியதிலிருந்து ரஷியாவின் ராணுவ தளங்கள் மீதான மிக முக்கியமான தாக்குதல்களில் ஒன்றாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ட்ரோன் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இதையும் படிக்க: முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேச்சு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவிக்குத் தடை

நியூயாா்க்: அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் தொழி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தொடா்ந்து யாசிப்பதை நட்பு நாடுகள் விரும்பாது: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடா்ந்து தங்களிடம் யாசகப் பாத்திரம் ஏந்தி வருவதை சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் விரும்பாது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். பாகிஸ்தானின் பலூசிஸ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்: தயாராகும் ஐரோப்பிய யூனியன்!

உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ளத் தயாராகி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்ப... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 51 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 51 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெண்களும் சிறுவா்களும் அடங்குவா் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினா்.இருந்தாலும் இந்தத் தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

போலந்தில் அதிபா் தோ்தலில் டிரம்ப் ஆதரவாளா் வெற்றி

போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி பெற்றாா்.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையு... மேலும் பார்க்க