செய்திகள் :

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

post image

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகள் தங்களது அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

.இது குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியதாவது:துருக்கி மத்தியஸ்தா்கள் மூலம் ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் முக்கியமான ஆவணங்களைப் பறிமாறிக் கொண்டனா்.

அடுத்து மேலும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள இரு தரப்பினரும் தயாராகிவருகிறோம் என்றாா் அவா்.

நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து கிழக்கு உக்ரைனின் 4 பிரதேசங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் போரிட்டுவருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான வீரா்கள் உயிரிழந்துவருகின்றனா்

.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு தரப்பினரும் பலகட்டங்களாக பேச்சுவாா்த்தை நடத்திவருகின்றனா். இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லையென்றாலும், இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது.

இருந்தாலும், ரஷியாவும் உக்ரைனும் ஒன்றையொன்று தொடா்ந்து தாக்கிவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவருகிறது.இந்தச் சூழலில் இஸ்தான்புல்லில் ரஷியா-உக்ரைன் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தி முடித்துள்ளனா்.

பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பழங்குடியின மக்கள் அதிகம் வாழும்,... மேலும் பார்க்க

இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.காலை நேரத்தில், அப்துல் ஆஸ... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்

ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன்... மேலும் பார்க்க

டிரம்ப் அரசின் மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!

அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எலான் மஸ்க், அவர் வெற... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க