ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்
``பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்" - உத்தவ் சிவசேனாவின் விமர்சனமும் பாஜக பதிலும்!
பஹல்காம் தாக்குதல் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. அதற்குப் பிறகு இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எல்லைத் தாண்டிச் சென்று தீவிரவாதிகளைக் கொன்றிருந்தாலும், பஹல்காம் தாக்குதல் நடந்து இன்றுடன் 40-வது நாள். இன்னும் ஏன் பஹல்காம் தாக்குதலை நடத்திய 6 பேர் கைது செய்யப்படவில்லை எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக சிவசேனா-யுபிடி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்திடம் கேள்வி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், ``திவீரவாதிகள் ஏன் கைது செய்யப்படவில்லை என்றால் அவர்கள் பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கலாம் - அதனால்தான் அவர்கள் பிடிபடவில்லை. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், ஒரு நாள் பா.ஜ.க அலுவலகத்திலிருந்து அந்த ஆறு பேரும் கட்சியில் சேர்ந்ததாக ஒரு செய்திக்குறிப்பு வரும். அதனால் எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்." என்றார்.
இந்தக் கருத்துக்கு பதிலளித்த பாஜக தலைவர் ராம் கதம்,``உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் போன்ற சிவசேனா-யுபிடி தலைவர்கள் மனம் தளர்ந்துவிட்டனர், அவர்களை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். சஞ்சய் ராவத்தின் கருத்து நமது ஆயுதப்படைகளுக்கு அவமானம்" எனத் தெரிவித்திருக்கிறார்.