செய்திகள் :

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' - கமல் மீது வானதி விமர்சனம்

post image

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி பதவிக்காக திமுக-வுடன் கைக்கோத்துள்ளார்.

வானதி சீனிவாசன்

பொதுவாக சினிமா படப்பிடிப்பில் தான் கேமரா முன்பு ஒரு வசனம் பேசிவிட்டு பிறகு அதை மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் அரசியல் வாழ்க்கையிலும் வசனங்களை பேசிவிட்டு அதை மறக்கிறார்.

நாடாளுமன்றத்துக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று சுய நலத்துக்காக, தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு கமல் துரோகம் செய்துள்ளார். அவரால் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற முடியவில்லை. எனவே திமுக பின்னால் ஒளிந்து கொண்டு ராஜ்ய சபா எம்பி பதவியை பெற்றுள்ளார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடுஷோ நடத்தி மக்களை சந்தித்துள்ளார். அவர் பார்வையிட சென்ற இடங்களில் குப்பைகள் நிறைந்த கால்வாய் மீது துணிகளை மூடி மறைத்த சம்பவம் நடந்துள்ளது.

இது மிகவும் தவறானது. கோவையிலும் இதேபோல பல இடங்களில் குப்பைகளை மறைக்கிறார்கள். அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக வட மாநிலங்களில் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் மனம் திருந்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கையால் அங்கு தீவிரவாதம் குறைந்துள்ளது.

தீவிரவாதம்

தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இங்குள்ள முன்னணி அரசியல் தலைவர்கள் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.” என்றார்.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க