சங்க இலக்கியங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை: சுதா சேஷய்யன்
`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' - கமல் மீது வானதி விமர்சனம்
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி பதவிக்காக திமுக-வுடன் கைக்கோத்துள்ளார்.

பொதுவாக சினிமா படப்பிடிப்பில் தான் கேமரா முன்பு ஒரு வசனம் பேசிவிட்டு பிறகு அதை மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் அரசியல் வாழ்க்கையிலும் வசனங்களை பேசிவிட்டு அதை மறக்கிறார்.
நாடாளுமன்றத்துக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று சுய நலத்துக்காக, தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு கமல் துரோகம் செய்துள்ளார். அவரால் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற முடியவில்லை. எனவே திமுக பின்னால் ஒளிந்து கொண்டு ராஜ்ய சபா எம்பி பதவியை பெற்றுள்ளார்.

மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரோடுஷோ நடத்தி மக்களை சந்தித்துள்ளார். அவர் பார்வையிட சென்ற இடங்களில் குப்பைகள் நிறைந்த கால்வாய் மீது துணிகளை மூடி மறைத்த சம்பவம் நடந்துள்ளது.
இது மிகவும் தவறானது. கோவையிலும் இதேபோல பல இடங்களில் குப்பைகளை மறைக்கிறார்கள். அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக வட மாநிலங்களில் தீவிரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் மனம் திருந்தி வருகிறார்கள். இந்த நடவடிக்கையால் அங்கு தீவிரவாதம் குறைந்துள்ளது.
தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இங்குள்ள முன்னணி அரசியல் தலைவர்கள் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.” என்றார்.