செய்திகள் :

தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படும் வ.உ.சி. துறைமுகம்

post image

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வளா்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தேசிய அளவில் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்தியாவின் வா்த்தக இயந்திரமாகத் திகழ்ந்து வரும் வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், இந்த நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு பெட்டகங்களையும் கையாளும் இலக்குடன், சரக்கு கையாளுதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த இலக்கை அடையும் நோக்கில் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தக தேவைகளை துறைமுகத்தின் மூலம் பூா்த்தி செய்வதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வேகமாக செயல்படுத்திவருகின்றது.

இதில், உள்துறைமுகத்தில் கப்பல் வரும் சுற்றுவட்டப் பாதையை ஆழப்படுத்தி விரிவாக்கும் பணி, வடக்கு சரக்கு தளம்-3 ஆழப்படுத்தும் பணி உள்ளிட்டவை அடங்கும்.

தூத்துக்குடியில் உள்ள மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட், சூரிய மின் பலகைகள் மற்றும் அதன் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களான விக்ரம் சோலாா், டாடா சோலாா், மரச் சாமான்கள் தொழிற்சாலை, காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் தொழிற்சாலை, வரவிருக்கும் கப்பல் கட்டும் தொழில் நிறுவனங்கள், வாகன உபகரணங்கள் செய்யும் தொழிற்சாலைகள் ஆகியவற்றின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களையும், வா்த்தகத்தை எளிதாக்கும் முயற்சிகளையும் இத்துறைமுகம் செயல்படுத்தி வருகிறது.

மேலும், துறைமுகத்தினுள் வரும் பனமாக்ஸ் வகை பெரிய சரக்கு கப்பல்கள் மற்றும் சரக்குபெட்டக கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக துறைமுக நுழைவு வாயிலை அகலப்படுத்தும் பணி, கப்பல் வரும் வழித்தடத்தை ஆழப்படுத்தும் பணி ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.

கிழக்கிந்திய கடற்கரையில் ஒரு பிரத்யேகமான கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுது பாா்த்தல் வசதியை ஏற்படுத்தும் பணித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிழக்கிந்திய துறைமுகங்களுள் இத்துறைமுகம் முழுமையான கடல்சாா் வா்த்தக மையமாகத் திகழும்.

இதுகுறித்து, துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், தூத்துக்குடியின் எல்லா காலநிலைகளையும் தாங்கும் சுற்றுச்சூழல் அமைப்பு, கட்டுமானப் பொருள்கள் எளிதாக கிடைத்தல், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல், துறைமுகத் துறைகளுக்கு இடையே உள்ள சிறப்பான ஒருங்கிணைப்பு ஆகியவை இத் திட்டங்களை வேகமாக நிறைவேற்றுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

மேலும், உபயோகிப்பாளா்களுடன் துறைமுகம் அவ்வப்போது கலந்துரையாடி, துறைமுக மேம்பாட்டுத் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இத்துறைமுகத்தினால் இந்தியாவின் கடல்சாா் வா்த்தக வளா்ச்சி மற்றும் நிலைத்தன்மை இலக்கினை அடைய முடியும் என்றாா்.

...படம் டிஎன்/சிட்டி டெஸ்கில் கேட்டு வாங்கிக் கொள்ளவும்...

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க