செய்திகள் :

விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப் படையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

post image

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள 153 குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: 01/2025

பணி: Civilian Mechanical Transport Driver

காலியிடங்கள் :8

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Mess Staff

காலியிடங்கள்: 7

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு மெஸ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Cook (OG)

காலியிடங்கள் : 12

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய உணவுகளை தயார் செய்வதில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு ஆண்டு கேட்டரிங் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

காலியிடங்கள்: 14

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: House Keeping Staff

காலியிடங்கள்: 31

தகுதி: பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வீட்டு பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MTS (Chowkidar)

காலியிடங்கள்: 53

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான பணிகளை செய்யும் வகையில் ஆரோக்கியமான உடற்திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது காவலாளி, லாஸ்கர், தோட்டக்காரர் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper

காலியிடங்கள்: 16

தகுதி : பிளஸ் 2 தேர்ச்சியுடன் பெற்றிருக்க வேண்டும். பண்டக காப்பாளர் (Store Keeper) பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: Carpenter, Painter, Vulcanizer, Laundryman

காலியிடங்கள்: 10

மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற் தகுதி, தொழிற்திறன் மற்றும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனதுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 15.6.2025

மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?

என்எல்சி நிறுவனத்தில் வேலை:டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும உறுப்பினா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப்பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து த... மேலும் பார்க்க

மின் உற்பத்தி நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான வடகிழக்கு மின் உற்பத்தி கழகத்தில்(NEEPCO) நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்... மேலும் பார்க்க

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு(அப்ரண்டீஸ்) பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ற... மேலும் பார்க்க

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா..?: காலியிடங்கள் 400!

தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் முன்னணி பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் காலியிடங்களுக்கான அ... மேலும் பார்க்க

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ-நறுமண தாவர நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் லக்னௌவில் செயல்பட்டு வரும் மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுத... மேலும் பார்க்க