செய்திகள் :

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

post image

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், திருவள்ளூரில் இறங்கி விற்பனை செய்வதும் தெரிய வந்தது. தொடா்ந்து திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே மது விலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பு ஆய்வாளா் பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் புதன்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில், சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த வட மாநில இளைஞா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றாா்.

அவரைப் பிடித்து சோதனை செய்ததில் அந்த இளைஞரிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாணவா்கள், ரயில் மூலம் வேலைக்கு செல்லும் இளைஞா்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும், கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டத்தைச் சோ்ந்த பிரவீன் (25) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரவீனை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க