செய்திகள் :

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

post image

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தொடர்ந்து, சென்னையிலிருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, மைசூரு, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு வந்தே பாரத்தில் செல்லும் பயணிகள் இது தொடர்பாகப் புகார் அளித்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வே அல்லது ஐஆர்சிடிசி தரப்பில் இது குறித்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது ஐஆர்சிடிசி செயலி மூலம், பயணிகள் வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, ஒரு பாப்அப் மெசேஜ் வருகிறது. அதில், மதியம் மற்றும் இரவு உணவுக்கு மட்டுமே அசைவ உணவை தேர்வு செய்துகொள்ள முடியும் என்று அதில் தெரிவிக்கப்படுவதாகவும் பயணிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதிய உணவின்போது, உணவு பற்றி கருத்துக் கேட்டு படிவம் கொடுக்கிறார்கள். அதில் எந்தக் குறையை எழுதினாலும், அதற்கான பதில் கிடைப்பதில்லை என்றும் பயணிகள் கூறுகறிர்கள். இது மட்டுமல்ல, சென்னையிலிருந்து நாகர்கோயில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலி செல்லும் விரைவு ரயில்களில் கூட ஏராளமான வட மாநில உணவுகள்தான் இடம்பெறுகின்றன. இதன் சுவை தென்னிந்தியர்களுக்குப் பெரும்பாலும் பிடிப்பதாக இல்லை என்றும் சில பயணிகள் கூறுகிறார்கள்.

இது குறித்து உரிய விளக்கம் கொடுத்து, பயணிகளின் புகார்கள் மீது கவனம் செலுத்துமா ஐஆர்சிடிசி என்பதே பெரும்பாலானோர் எதிர்பார்ப்பு.

முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மத்திய... மேலும் பார்க்க

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க