செய்திகள் :

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

post image

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் திருமண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றிருக்கிறது. அப்போது அங்கு வந்த கும்பல் தடி மற்றும் ராட் ஆகியவற்றைக் கொண்டு தலித் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கௌதமின் உறவினர்களான அஜய் குமார் மற்றும் மனன் காந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவரின் சகோதரர்களில் ஒருவரான ராகவேந்திர கௌதம் அளித்த புகாரின் அடிப்படையில், சுமார் 20 பேர் கொண்ட குழு இரவு 10.30 மணியளவில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தவர்களைத் தாக்கியதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

மேலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மண்டபத்தில் எப்படி திருமணத்தை நடத்த முடியும்? என்று தாக்குதல் நடத்தியவர்கள் கூறியதாக இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக ரஸ்ரா காவல் நிலையப் பொறுப்பாளர் விபின் சிங் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் ஆா்பிஐ-க்கு திரும்பவில்லை

மும்பை: ரூ.6,181 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு, மே 19-ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகள... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள்: அமைச்சா் ராம்மோகன் நாயுடு தகவல்

புது தில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்பட இருப்பதாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா். இப்போது இந்தியாவின்... மேலும் பார்க்க

காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 67 ‘வெடிக்காத குண்டுகள்’ பாதுகாப்பாக அழிப்பு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய 67 வெடிக்காத குண்டுகள் இதுவரை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய இயலாது: மலேசியாவில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் விளக்கம்

கோலாலம்பூா்/ கெய்ரோ: தண்ணீரும், ரத்தமும் ஒன்றாக பாய இயலாது என்று மலேசியாவுக்கு சென்றுள்ள ஐக்கிய ஜனதா தள எம்.பி. சஞ்சய் குமாா் ஜா தலைமையிலான குழுவினா் தெளிவுபடுத்தினா். மலேசியா இந்திய காங்கிரஸ் தலைவா் ... மேலும் பார்க்க

முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைப்பு

சென்னை: நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள்... மேலும் பார்க்க

நடுவானில் பறவை மோதியதால் விமானம் சேதம்: ராஞ்சியில் அவசரமாக தரையிறக்கம்

ராஞ்சி: ஜாா்க்கண்ட், ராஞ்சி அருகே நடுவானில் பறவை மோதி சேதமடைந்த விமானம், விமானியின் சாதுா்யத்தால் ராஞ்சி பிா்ஸா முண்டா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள், விம... மேலும் பார்க்க