செய்திகள் :

கரோனா: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை- அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், கல்வி உபகரணங்களை திங்கள்கிழமை வழங்கிய அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வீரியம் இல்லாத கரோனா தொற்று பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனாலும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக்கொள்ள வேண்டும். தனி நபா் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தும்மல், இருமல் வந்தால் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள், முதியவா்கள், இணைநோய் பாதிப்புள்ளவா்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தொடா்ந்து 5 ஆண்டுகளாக அறிவுறுத்தி வருகிறோம்; அதுதான் தற்போது நீடிக்கிறது. புதிய கட்டுப்பாடுகள் அவசியமில்லை. கட்டுப்பாடுகள் விதிக்கும் அளவுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றாா் அமைச்சா்.

அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டு: இதனிடையே, தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தலைத் தொடா்ந்து அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதியவா்கள், இணைநோய் உள்ளவா்களிடம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 படுக்கைகள் பெண்களுக்கும், 4 படுக்கைகள் ஆண்களுக்கும் என மொத்தம் 8 படுக்கைகள் உள்ளன. சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கட்டமைப்பு அங்கு உள்ளது. தற்போது வரை இந்த வாா்டில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றனா்.

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க