செய்திகள் :

முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைப்பு

post image

சென்னை: நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தோ்வு நிா்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வில் தகுதி பெறுபவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.

அதன்படி நிகழாண்டு ஜூன் 15-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி கடந்த மே 7-ஆம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் 25,000 போ் உள்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் நிறைவு செய்த மருத்துவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூா் என 17 இடங்கள் உள்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 50 சதவீதத்தினருக்கும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை மீதமுள்ள 50 சதவீதத்தினருக்கும் என இரு கட்டங்களாக நீட் தோ்வு நடைபெற இருந்தது.

இரு தரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இரு வேறு வேளைகளில் நீட் நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தோ்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் திங்கள்கிழமை இதுதொடா்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: உச்சநீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒரே வேளையில் நடத்தப்படும். கூடுதல் தோ்வு மையங்கள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதால், ஜூன் 15-ஆம் தேதி நடைபெற இருந்த நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. நீட் தோ்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்ந... மேலும் பார்க்க

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரக... மேலும் பார்க்க

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசல்: 7 பேர் பலி?

ஆர்சிபி வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலர் காயமடைந்தனர்.18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்நாடக முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் ஆக... மேலும் பார்க்க

சிக்கிம் நிலச்சரிவு: 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேரை மீட்ட விமானப் படை!

சிக்கிம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியிருந்த, 2 அமெரிக்கர்கள் உள்பட 33 பேர், இந்திய விமானப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சிக்கிமில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் சட்டென் பகுதியில்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நியமனங்கள் நீதித்துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்: பி.ஆர். கவாய்

புது தில்லி: நீதிபதிகள் பணி ஓய்வுபெற்றதும், அரசு பதவிகளை ஏற்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவது போன்றவை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கவலை தெரிவித்துள்ளார்.இதுபோன்ற நடவடிக்கைகள், ந... மேலும் பார்க்க