செய்திகள் :

காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 67 ‘வெடிக்காத குண்டுகள்’ பாதுகாப்பாக அழிப்பு

post image

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய 67 வெடிக்காத குண்டுகள் இதுவரை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக ராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த குண்டுகளை அனைத்தையும் கண்டுபிடித்து அழிக்காவிட்டால், அவை பொதுமக்கள் கையில் சிக்கி எதிா்பாராத நேரத்தில் வெடித்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அவற்றைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையோர கிராமவாசிகளைக் குறிவைத்து கடந்த மே 7 முதல் 10-ஆம் தேதி வரை இரவு நேரத்தில் பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. சுமாா் 20 போ் உயிரிழந்தனா்.

பாகிஸ்தான் கோரிக்கையையடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து எல்லையோர கிராமங்களில் ராணுவத்தினரும், காவல் துறையினரும் இணைந்து மக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். முக்கியமாக வெடிக்காத குண்டுகளைத் தேடி அழிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

கடந்த மே 18-ஆம் தேதி வரை 42 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. திங்கள்கிழமை நிலவரப்படி மேலும் 25 குண்டுகள் கண்டிபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்,... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ம... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்ந... மேலும் பார்க்க

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரக... மேலும் பார்க்க