செய்திகள் :

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவு

post image

திபெத்: திபெத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை காலை 3.11 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

முன்னதாக, மே 27 ஆம் தேதி 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகள்: இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ முயற்சிப்பதாக ரஷியா குற்றச்சாட்டு

திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது .

பூமி அமைப்பு மிகவும் சிக்கலானது, மேலும் பூகம்பங்களை நாம் கணிக்க முடியாது. இருப்பினும், திபெத்தில் பூகம்பங்களுக்கு என்ன காரணம் என்பதை நன்கு புரிந்துகொள்ளவும், பூகம்பங்களால் ஏற்படும் நடுக்கம் மற்றும் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ளவும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று டெக்சாஸ் பல்கலைக்கழக புவியியல் அறிவியல் பேராசிரியர் கார்ப்ளஸ் கூறினார்.

ஓய்வு பெற்றவா்களை மீண்டும் அரசுப் பணி: நயினாா் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: ஓய்வு பெற்றவா்களை மறுசுழற்சி செய்து மீண்டும் அரசுப் பணிகளில் பணியமா்த்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது, கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா்... மேலும் பார்க்க

எந்த அமித்ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. தில்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே 'கட்டுப்பாட்டை மீறியது'தான். இதை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார்.மதுரையி... மேலும் பார்க்க

தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது: மு.க.ஸ்டாலின்

மதுரை: திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, தில்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி... மேலும் பார்க்க

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ... மேலும் பார்க்க

சென்னையில் ஒருநாள்கூட வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடவில்லை!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அவர், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரு... மேலும் பார்க்க

ராமதாஸ் வழிகாட்டி; நான்தான் தலைவர்: அன்புமணி

ராமதாஸ் பாமகவின் வழிகாட்டி, நான்தான் கட்சியின் தலைவர் என பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இ... மேலும் பார்க்க