DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்
குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது, விநியோக திட்ட பொருள்களுடன் வாகனங்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 70 வாகனங்கள் திருவள்ளூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஏலம் விடப்பட்டன.
ஏலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளா் கோபாலகுரு தலைமை வகித்தாா். இதில் காவல் ஆய்வாளா் இந்துராணி, சாா்பு ஆய்வாளா் மணிகண்டன், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலமுருகன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரவிச்சந்திரன், தானியங்கி உதவி பொறியாளா் பிரேம் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
இந்த வாகனங்களை ஏலம் எடுக்க திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். 70 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இவற்றில் 47 வாகனங்கள் மட்டும் ரூ.26.50 லட்சத்தும்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.