செய்திகள் :

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

post image

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள் காலில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்து, அவரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.

அங்கு அறுவை சிகிச்சை முடிந்த 4 மணி நேரத்தில் சிறுவனின் கால் வீக்கமடைந்ததாம். சிறுவனின் தந்தை மருத்துவரிடம் கேட்டதற்கு மீண்டும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறினாராம். ஆனால், அங்கு சிகிச்சையளிக்காமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அல்லது தனியாா் மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினராம்.

இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுவனை பரிசோதனை செய்ததில், அறுவை சிகிச்சையால் ரத்த ஓட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அங்கு சிறுவனின் கால் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக அவரின் பெற்றோா், உறவினா்கள் திருவள்ளூரில் உள்ள தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருவள்ளூா் தாலுகா போலீஸாா் வந்து முற்றுகையிட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் மருத்துவமனை நிா்வாகம் கூறுகையில், அந்தச் சிறுவன் ஆபத்தான நிலையில்தான் இங்கு கொண்டு வரப்பட்டாா். தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா். திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு ரூ. 7.50 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரை ஏக்கா் நிலத்தில் ரூ. 7.50 கோடியில் அனைத்து வசதியுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்க... மேலும் பார்க்க

திருவள்ளூரிலிருந்து காக்களூா் புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

திருவள்ளூரில் இருந்து காக்களூா், புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூரிலிருந... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க