Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப் பயணம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
முதல் முறையாக அமெரிக்க பயணம். 2017 வருடம் செப்டம்பர் மாதம் சென்றேன். என் இரு குழந்தைகளுக்கு அங்கே வேலை மிகுந்த உற்சாகத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் செய்து அந்த நாளும் வந்தது.
என் மகளின் ஊரை சென்றடைந்தோம். சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து கொண்ட பிறகு வேறு இடமான சிறிது தொலைவில் உள்ள யோசிமிட்டி பார்க் என்ற இடத்திற்கு சென்றோம்.

அங்கேயே தங்க வசதி இருந்தது. முதல் நாள் பயணக் களைப்பில் சீக்கிரம் தூங்கி விட்டோம். மறு நாள் காலை கொஞ்சமாக டிபன் சாப்பிட்டு கையில் ஜூஸ் ,பழம் பிஸ்கட்டும் குடிக்க தண்ணீர் பேக் பேக்கில் அவரவர்கள் தனித்தனியாக எடுத்துக் கொண்டோம்.
மிகவும் உற்சாகமாக நடக்க தொடங்கினோம். பார்க் உள்ளே அடர்ந்த மரங்கள் . அடர்த்தியான புதர்கள். ஆங்காங்கே பார்வையாளர்கள் அமர்ந்து இளைப்பாற சாப்பிட மரத்தால் ஆன மேசை ,பென்ச்.
கொஞ்ச தூரம் நடந்த பிறகு ஒரு மிகவும் குறுகிய மலைப்பாதை தொடங்கியது.
சாதாரணமான பாதையாய் தோன்றியது. "வர்னல் நீர்வீழ்ச்சி"யை காணப் போகிறோம் என்ற உற்சாகம் . மிகுந்த குதூகலத்துடன் நடக்க ஆரம்பித்தோம்.. சில இடங்களில் மேலும் குறுகிய பாதை. அந்த நீர் வீழ்ச்சி போவதற்கும். வருவதற்கும் ஓரே பாதை. ஒரு புறம் உயர்ந்த பாறை.

மற்றொரு புறம் பள்ளத்தாக்கு. சில இடங்களில் எதிரில் வருவோர்க்கு வழி விட பாதையின் சரிவில் ஒதுங்கும் நிலைமை. இதன் அழகை ரசித்துக் கொண்டே தொடர்ந்து மேலே ஏறினோம்.
படிப்படியாக பாதை செங்குத்தாக செல்ல தொடங்கியது. இப்பொழுது கொஞ்சம் சிரமம் தெரிய ஆரம்பித்தது. அறுபதை தாண்டியும் இப்படிபட்ட அனுபவங்களை விட மனமில்லாமல் சிறு பிள்ளை போல் கிளம்பி விட்டேன். சிறிது தூரம் என்மகள் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்.
அருகில் ஒரு உறுதியான மரக்கிளையை கண்டவுடன் அதை லாவகமாக கையால் ஒடித்து எனக்கு தகுந்தார்போல் அதன் நீளத்தை குறுக்கினாள். இப்பொழுது அந்த குச்சியை வைத்துக்கொண்டு இன்னும் சுலபமாக ஏற முடிந்தது. இங்கே நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இப்படிபட்ட பயணம் மேற்கொள்வதற்கு பல உபகரணங்கள் உள்ளன. மலை பாதை ஏறுவதற்கென்றே உள்ள கம்பங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும்.
ஒரு கிலோ மீட்டர் மேல் ஏறிய பிறகு ஒரு பாலம் அதன் அருகே சற்று பரந்த இடம். அந்தபாலத்தின் கீழே தண்ணீர் ஆரவாரமின்றி அமைதியாக சென்று கொண்டிருந்தது.

சுற்றுமுற்றும் ஆங்காங்கே மேகமூட்டம் .இடையில் சூரியன் அவற்றை கிழித்துக் கொண்டு வெளியே எட்டிபார்த்தது. இவை அனைத்தையும் ரசித்தவாறு ஓரிடத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து பழங்களை சாப்பிட்டோம். திரும்ப நடக்க ஆரம்பித்தோம்.
இப்பொழுது முன்னை விட பாதை செங்குத்தாகவும் குறுகியதாகவும் இருந்தது.
இரண்டு படிகள் இடையே ஒத்தார்போல் உயரம் இல்லை. படியில் இருந்து பார்த்தால் ஒரு அழகிய நீர் வீழச்சி. ஜோ வென்று தண்ணீர் கீழே விழும் அழகே அழகு. சில் என்று காற்று ஒரு பக்கம். ஒரு புறம் குளிர்ந்த சாரல்.
எனக்கு ஒரே மகிழ்ச்சி. "வர்னல் நீர் வீழ்ச்சி "வந்து விட்டோம் என்று குதித்தேன்.
அப்பொழுது தான் தெரிந்தது . பாதிதூரமே வந்திருக்கிறோம் என்று. கிடைத்த இடத்தில் உட்கார்ந்து ஜூஸை குடித்து பிஸ்கட்டு சாப்பிட்டேன்.

மெதுவாக ஒரு அணில் என் கிட்டே வந்து வந்து சென்றது. கொஞ்சம் தைரியம் வந்தவுடன் என் காலணியின்மீது உட்கார்ந்தது. பிஸ்கட்டு சிறிது உடைத்து போட்டேன். அழகாக சாப்பிட்டு விட்டு வேகமாக ஓடி சென்றது. மிகவும் ரசித்த வண்ணம் மீண்டும் ஏறத் தொடங்கினோம்.
ஒருஒன்றறைமணிநேரம்ஏறியபிறகு "வர்னல்நீர்வீழச்சி"யை வந்தடைந்தோம்.
பரந்த இடம் . பாறைகளாய் இருந்தது. இடையே சல சல வென்று நீரோடைகள். நடப்பவர்களுக்கு இலகுவாக பாறை சரிவு அருகே இரும்பு கைப்பிடிகள் அமைக்க பட்டிருந்தது.
கிட்டதட்ட போக வர நான்கு கிலோ மீட்டர். நான்கு மணி நேரம் .ஆயிரம் அடி உயரம். நீர் வீழ்ச்சியின் உச்சியை அடைந்த மகிழ்ச்சி. முயன்றால் முடியாது என்பதே இல்லை என்பது உண்மை.

கீழே இறங்க மீண்டும் நடக்க தொடங்கினோம். அதே காட்சிகளை மீண்டும் ரசித்தவாறு வந்து ஒரு வழியாக தங்கும் இடம் வந்தடைந்தோம். அன்று அருமையான உறக்கம். மனதில் ஒரு பெருமிதம். வயது ஒரு எண்ணிக்கை. மனம் திடம் இருந்தால் எதையும் செய்து முடிக்கலாம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.