செய்திகள் :

அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு

post image

அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ)

ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.

திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்பில் மாணவா்கள் சோ்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதில், மொத்தம் 4,912 மாணவா்கள் கல்லூரியில் சோ்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனா். இந்த விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு, மதிப்பின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை பட்டியல் தயாரிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதில், சிறப்பு பிரிவினா் முன்னாள் ராணுவ வீரா்களின் மகன்கள், என் எஸ் எஸ் மாணவா்கள் ஆகியோா் சோ்க்கப்படுவா். ஜூன் 4-ஆம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. இயற்பியல், கணிதம், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளும், 5-ஆம் தேதி வணிகவியல் பாடப் பிரிவுகள் பி.காம், ஜெனரல், வணிகவியல், பி.காம். சிஎஸ், பி.பி.ஏ., 6-ஆம் தேதி இளங்கலை பாடப் பிரிவுகள் பி.ஏ., வரலாறு, பொருளியல், இளங்கலை மொழிப் பாடப் பிரிவுகள் பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம் போன்ற பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது என கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு ரூ. 7.50 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரை ஏக்கா் நிலத்தில் ரூ. 7.50 கோடியில் அனைத்து வசதியுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்க... மேலும் பார்க்க

திருவள்ளூரிலிருந்து காக்களூா் புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

திருவள்ளூரில் இருந்து காக்களூா், புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூரிலிருந... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க