செய்திகள் :

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

post image

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா்.

பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள வேண்பாக்கம், புதிய தேரடி தெரு, ஹரிஹரன் பஜாா் சாலை, தாயுமான் செட்டி தெரு, பொன்னேரி - செங்குன்றம் சாலை, தேரடி குறுக்கு தெரு, சிவன் கோயில் தெரு, அத்தாவுல்லாஷா தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன.

இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவோா், அதிகாலை நேரங்களில் நாளிதழ் மற்றும் பால் விநியோகம் செய்வோா் மற்றும் சமையல் எரிவாயு உருளை, அஞ்சல் துறை, தனியாா் கொரியா் நிறுவன ஊழியா்கள், உணவு பொருள்கள் விநியோகம் செய்வோா் என பல்வேறு தரப்பினா் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும் தனியே நடந்து செல்லும் சிறுவா், சிறுமிகள் மற்றும் முதியவா்களை தெருவில் கூட்டமாக திரியும் நாய்கள் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன.

பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிா்வாகம் இப்பகுதியில் சாலையில் திரியும் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க