செய்திகள் :

ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?

post image

ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில் கொண்டாடுவார்கள். சுனில் நரைன் மாதிரி சிலரே அமைதியாக இருப்பார்கள்.

சுனில் நரைன் வரிசையில் ஜஸ்பிரீத் பும்ராவும் இருக்கிறார். பெரும்பாலான போட்டிகளில் பும்ரா அமைதியாக சிரித்து கடந்துவிடுவார். சில போட்டிகளில் முறைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸுக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் பும்ரா 144 போட்டிகளில் 183 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆஸி. முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பும்ரா பேசியதாவது:

நானும் தவறாக நடந்துகொண்டிருக்கிறேன்

நானும் சவாலான போட்டி விளையாடி வெல்ல நினைக்கிறேன். ஆனால், அந்த எல்லையை தாண்டாமல் விளையாட நினைக்கிறேன். அனைவரும் வித்தியாசமாக விளையாடுவார்கள்.

தொடக்கத்தில் எனக்கு பயிற்சியாளர்கள் இல்லாததால் தொலைக்காட்சி பார்த்துதான் கற்றுக்கொண்டேன்.

வார்த்தைகள், உடல் ரீதியாக எதிரணியை காயப்படுத்தும் பந்துவீச்சாளர்களை போலவே நானும் சிலமுறை முயற்சித்து இருக்கிறேன். எனக்கு அது ஒத்துவரவில்லை.

கோமாளியாக விரும்பவில்லை

கோபமடைந்தால் சரியாக பந்துவீச முடியாது. அதனால், எனது கோபத்தைக் கட்டுப்படுத்தி பந்துவீச்சில் கவனம் செலுத்தினேன்.

நமது சிறந்த செயல்பாடுகளை அளிக்க வேண்டும்தான். ஆனால், அதற்காக ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை எனக் கூறினார்.

பும்ரா யாரையும் குறிப்பிட்டு இதைச் சொல்லாவிட்டாலும் விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்கள்.

ஆஸி. ஊடகங்கள் கோலியை ’கோமாளி கோலி’ என பிஜிடி தொடரின்போது குறிப்பிட்டது.

இன்று நடைபெறும் குவாலிஃபயர் 2-இல் மும்பை வென்றால் ஆர்சிபியை இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல்... மேலும் பார்க்க

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டிய... மேலும் பார்க்க

ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம்!

பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா இருவருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. நடப்பு ஐபில் தொடரின் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2- போ... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நட... மேலும் பார்க்க

மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட... மேலும் பார்க்க