செய்திகள் :

``பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை வாபஸ் பெறுகிறோம்" - இந்தியக் குழுவை சந்தித்த கொலம்பியா அறிவிப்பு!

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் விளக்கிவருகிறது. அதர் தொடராக வியாழக்கிழமை கொலம்பியா சென்ற அந்தக் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.

சசி தரூர்
சசி தரூர்

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``இந்தியாவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானில் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் அறிக்கை ஏமாற்றத்தை அளித்தது" என்றார். அதைத் தொடர்ந்து இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரபூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.

இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்தித்த பிறகு, கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ, “ எங்களுக்குக் கிடைத்த விளக்கம், அங்கு இருக்கும் உண்மையான நிலை, காஷ்மீரில் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது எங்களுக்குக் கிடைத்த விரிவான தகவல்களின் மூலம், பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, எங்களின் கவலை தெரிவித்த அறிக்கையை திரும்பப் பெறுகிறோம். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை தூதுக்குழு முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது." என்றார்.

`3 அடி இலையில் 13 வகை அசைவ உணவு' - திமுக பொதுக்குழு கூட்டத்தின் விருந்து | Photo Album

பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொ... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்... மேலும் பார்க்க

``தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்... மேலும் பார்க்க

`ரித்தீஷ் ரூ.300 கோடிக்கும், ஆகாஷ் ரூ.500 கோடிக்கும் வீடு கட்டுகிறார்கள்' - நயினார் நாகேந்திரன்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் தூர்வாரப்படாமல் குப்பைகள் நிறைந்த கால்வாயை துணி மூடி மறைத்துள்ளனர். இது... மேலும் பார்க்க

பாமக: அன்புமணி கட்சியை விட்டு நீக்கமா...? - நிறுவனர் ராமதாஸ் அளித்த பதில் என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று( ஜூன் 1) தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடத்திய ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியி... மேலும் பார்க்க

`திமுக பின்னால் ஒளிந்து ராஜ்சபா பதவி.. நம்பிய வாக்காளர்களுக்கு துரோகம்' - கமல் மீது வானதி விமர்சனம்

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கமல்ஹாசன் 2019, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, ராஜ்ய சபா எம்பி... மேலும் பார்க்க