செய்திகள் :

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38).

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார். கபில் துலேயில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்திருந்தார்.

அங்குப் படிக்கும்போது ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இருவரும் வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டனர்.

கபிலின் கல்லூரி கால காதலி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கபில் தனது முன்னாள் காதலியைச் சந்தித்தார்.

அதன் பிறகு அவர்களுக்குள் பழைய காதல் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்களது உறவை வளர்த்துக்கொண்டனர்.

இவர்களின் காதல் விவகாரம் கபில் மனைவி பூஜாவிற்குத் தெரிய வந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

இதையடுத்து மனைவி பூஜாவைக் கொலை செய்ய முடிவு செய்த கபில், அதற்காகத் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து திட்டம் தீட்டினார்.

வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை ஊசியில் அடைத்து அதனைத் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்தினார்.

முதலில் பூஜாவைக் கீழே தள்ளினர். உறவினர்கள் பூஜாவின் கை மற்றும் காலைப் பிடித்துக்கொண்டனர். உடனே கபில் பூச்சிக்கொல்லி மருந்தை ஊசி மூலம் பூஜாவிற்குச் செலுத்தினார். பின்னர் பூஜா சாகும் வரை கபில் அருகிலே இருந்தார்.

ஒன்றரை மணி நேரம் கழித்து பூஜா இறந்த பிறகு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் இறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.

pooja with husband
pooja with husband

பூஜாவைப் பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் கபில் தனது மனைவியின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்தார்.

இது குறித்து பூஜாவின் சகோதரர் பூசன் மகாஜனுக்கும் கபில் போனில் தகவல் கொடுத்தார். மகாஜன் உறவினர்களோடு வந்து போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து பூஜாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக கபில், அவரது சகோதரி மற்றும் தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க