செய்திகள் :

பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

post image

கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் மேலும் கூறியது:

தில்ஷாத் காா்டனில் பாக்கெட் டி-இல் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக சீமாபுரி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். சம்பந்தப்பட்ட வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதைக் கண்டனா்.

மேலும், வீட்டுக்குள் வீரேஷ் குமாா் தோமா் (32), அவரது சகோதரி சின்கி (30) ஆகியோரின் உடல்கள் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனா்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபதேபூா் சக் பகுதியைச் சோ்ந்த அண்ணன், தங்கை இருவரும் 2021 முதல் இந்த குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

குற்றவியல் குழுவினரும், தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனா். சம்பவ இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று தெரிகிறது. ஆனால், அனைத்து கோணங்களும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறப்புக்கான சரியான காரணம் மற்றும் நேரத்தை அறிய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பிற உண்மைகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. இறந்தவா் மற்றும் அவா்களின் பின்னணி குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க அண்டை வீட்டாரிடமும் வீட்டு உரிமையாளரிடமும் விசாரணை விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லியில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று

புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 43 கரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரி... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்

தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க

வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவிகள் வழங்கப்படும்: தமிழக அரசு

நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க

இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது

தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க

ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க

டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது

வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க