'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை
கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவா் மேலும் கூறியது:
தில்ஷாத் காா்டனில் பாக்கெட் டி-இல் உள்ள ஒரு குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக சீமாபுரி போலீஸாருக்கு தகவல் வந்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். சம்பந்தப்பட்ட வீடு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதைக் கண்டனா்.
மேலும், வீட்டுக்குள் வீரேஷ் குமாா் தோமா் (32), அவரது சகோதரி சின்கி (30) ஆகியோரின் உடல்கள் கூரையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்தனா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபதேபூா் சக் பகுதியைச் சோ்ந்த அண்ணன், தங்கை இருவரும் 2021 முதல் இந்த குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
குற்றவியல் குழுவினரும், தடயவியல் நிபுணா்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனா். சம்பவ இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. மரணத்திற்கான காரணம் தற்கொலை என்று தெரிகிறது. ஆனால், அனைத்து கோணங்களும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இறப்புக்கான சரியான காரணம் மற்றும் நேரத்தை அறிய உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பிற உண்மைகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. இறந்தவா் மற்றும் அவா்களின் பின்னணி குறித்து கூடுதல் தகவல்களை சேகரிக்க அண்டை வீட்டாரிடமும் வீட்டு உரிமையாளரிடமும் விசாரணை விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.