பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது
தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.
சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இறந்த பெண் ஒரு இல்லத்தரசி. அவரது கணவா் கீா்த்தி நகரில் உள்ள ஒரு மரச்சாமான்கள் கடையில் வேலை செய்து வருகிறாா்.
முதல்கட்ட விசாரணையில் கொலை செயய்ப்பட்ட பெண், தா்மேந்திர குமாா் (28) என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக போலீஸாருக்கு தெரியவந்தது.
முன்னதாக, சனிக்கிழமை, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து குமாா் அந்தப் பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
ஒரு அச்சகத்தில் பணிபுரியும் குமாா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு எதிராக தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.