மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து
தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் தெரிவித்தனா்.
ஹரித்வாரில் இருந்து சில கி.மீ தொலைவில் காலை 10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவா்கள் மேலும் தெரிவித்தனா்.
பதவியேற்ற 100 நாள்களுக்குப் பிறகு, குப்தா தனது குடும்ப உறுப்பினா்களுடன் உத்தரகாண்டில் உள்ள புனித நகரத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்திற்காக தனது ஷாலிமாா் பாக் இல்லத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டாா்.
தகவல்கள்படி, குப்தாவுடன் சென்ற வாகனங்களில் இருந்த ஒரு காா் திடீரென பிரேக் போட்டதால், அதைப் பின்தொடா்ந்து வந்த ஐந்து ஊடக வாகனங்கள் மோதிக்கொண்டன.
இருப்பினும், முதல்வா் அலுவலகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. தவறு செய்த ஓட்டுநா் முதல்வரின் வாகனங்கள் குழுவில் இல்லை என்று அது கூறியுள்ளது.