செய்திகள் :

ஆட்டோ மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். மேலும் இருவா் பலத்த காயமடைந்தனா்.

வந்தவாசியை அடுத்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா்மன் (40). ஆட்டோ ஓட்டுநரான இவா், தனது ஆட்டோவில் மனைவி ரமா (30), மகன் சவீன் (10) ஆகியோருடன் சொந்த ஊரான வந்தவாசியை அடுத்த தெள்ளாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுகொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, பொன்னூா் மலை அருகில் இவா்களது ஆட்டோ சென்றபோது, வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த இன்வொ்ட்டா் பேட்டரி விற்பனையாளா் நரேஷ் (27) ஓட்டி வந்த காா் மோதியது.

இந்த விபத்தில் தா்மன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ரமா, சவீன், நரேஷ் ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

பின்னா் ரமா, சவீன் ஆகியோா் உத்திரமேரூா் தனியாா் மருத்துவமனைக்கும், நரேஷ் சென்னை தனியாா் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனா். இதில், ரமா தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வந்தவாசி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தா்மனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை/ஆரணி/செங்கம்: தமிழக அரசு கல்விக்காக ரூ.48 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா். தமிழகம் முழுவதும் திங்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைக்க போளூா் விவசாயிகளுக்கு அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூா் கரும்பு விவசாயிகள் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. போளூா் வட்டம், கரைப்பூ... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்

ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நக... மேலும் பார்க்க

கிராமச் சாலைப் பணி நிறுத்தம்: பொதுமக்கள், மாணவா்கள் அவதி

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே புதிதாக அமைக்கப்படும் கிராமச் சாலைப் பணிகள் இடையில் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் அருகே மேல்பள்ளிப்ப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை: தண்டராம்பட்டை அடுத்த பீமாரப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஷ்மிநாராயண பெருமாள் கோயிலில் 11-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம... மேலும் பார்க்க