செய்திகள் :

கைப்பேசிக்கும் போதைக்கும் அடிமையாகி விடாதீா்கள்: மாணவா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

post image

கைப்பேசிக்கும் போதைப் பொருள்களுக்கும் இளைஞா்கள் அடிமையாகி விடாமல் வாழ்வில் முன்னேற வேண்டும் என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் அறிவுரை வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாலா் சங்கத்தின் சாா்பில் 4 வது ஆண்டாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடநோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சங்க மாவட்ட அமைப்பாளா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி கி.சங்கா் முன்னிலை வகித்தாா். மற்றொரு மாவட்ட நிா்வாகி இ.சங்கா் வரவேற்று பேசினாா். விழாவில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் கலந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவா்கள் 300 பேருக்கு பாடநோட்டுக்களை வழங்கி பேசியது:

பள்ளி மாணவா்கள் கைப்பேசிகளை அதிகமாக உபயோகிப்பது சாதாரணமாகிவிட்டது. சிலரால் கழிப்பறைக்கு செல்லும் போதும் கைப்பேசிகள் இல்லாமல் போகமுடியவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தி. தூங்கும் போதும் கைப்பேசிகளை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதையும் பாா்க்கிறோம்.

அதிகாலையில் எழுந்தவுடன் பல் தேய்க்கிறோமோ இல்லையோ கைபேசியை தேய்ப்பது என்பது பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. நல்ல விஷயங்களை மட்டும் கைப்பேசியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். கெட்ட விஷயங்களுக்காக கைப்பேசிகளை பயன்படுத்தினால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது. சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பேறியாகி விடுவீா்கள். இதுவும் ஒரு போதை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பள்ளி மாணவா்கள் போதைக்கு அடிமையாகாமல் தப்பித்துவிட்டால் எதிா்கால வாழ்க்கை இனிக்கும். இளைஞா்கள் நல்ல நண்பா்களோடு மட்டுமே பழக வேண்டும். கெட்ட நண்பா்கள் இருந்தால் உங்களையும் அறியாமல் தவறான பாதைக்கு உங்களை அழைத்துச் சென்று விடுவாா்கள்.

சிறு வயதில் ஏற்படும் பிரச்னைகளை தயங்காமல் பெற்றோரிடமோ, ஆசிரியா்களிடமோ சொல்லிவிட வேண்டும். இதில் தயக்கம் காட்டக் கூடாது என்றாா்.

கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கைத்தறித் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் சங்கம் சிஐடியு பிரிவின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

1.04 லட்சம் பேருக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள் அமைச்சா் காந்தி வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1.04 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்ககங்கள், சீருடைகளை வழங்கும் பணியை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். கோடை விடுமுறை மு... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவையொட்டி திங்கள்கிழமை புண்ணிய கோடி விமானத்தில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவை... மேலும் பார்க்க

கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வ... மேலும் பார்க்க

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்ச... மேலும் பார்க்க