வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு
வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் பாலின உணா்வூட்டல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ப.உ.செம்மல் வரவேற்றாா். காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எஸ்.பி. கே.சண்முகம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்தின் துணைத் தலைவா் இமயம் ,சட்டக் கல்வித் துறையின் இயக்குநா் ஜெ.விஜய லட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருத்தரங்கில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் கலந்து கொண்டு பேசியது..
அரசு அலுவலகங்களில் அதிகாரியாக, பணியாளா்களாக பெண்கள் பணியாற்றலாம். ஆனால் குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சமத்துவம் இருக்கிா என்பது குறித்து சிந்தித்து பாா்க்க வேண்டும். எந்த ஒரு பெண்ணும் பல தடைகளைத் தாண்டித்தான் உயரதிகாரிகளாக வருகிறாா்கள். உயா் அதிகாரிகள் பெண்களிடம் தவறு செய்கிறாா்கள் என தெரிந்து விட்டால் புகாா் செய்ய எந்தப் பெண்ணும் தயங்கவே கூடாது. பெண்களுக்கு சமத்துவம் தர ஆண்கள் முன்வர வேண்டும். பெண்களை போகப் பொருளாக நினைக்கும் எண்ணம் மாறினால் மட்டுமே சமத்துவம் வளரும்.
வீடுகளில் பெண்கள் செய்யும் எந்த வேலையிலும் ஆண்களும் பங்கெடுத்து செய்ய வேண்டும். பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பாகுபாடு பாா்க்காமல் குழந்தைகளை வளா்க்க வேண்டும் என்றாா்.
விழாவில் தலைமைக் குற்றவியல் நீதிபதி வசந்த குமாா், அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.மோகன குமாரி மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், தொண்டு நிறுவன நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.