கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்
தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் 7 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான வசந்த உற்சவம் கடந்த 24- ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் ஆஞ்சநேயா் சந்நிதி சென்று திரும்பி வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
உற்சவ நிறைவையொட்டி பெருமாள் கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினாா். அங்கு சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
மாலையில் பெருமாள் வசந்த மண்டபத்திலிருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்க குதிரை வாகனத்தில் சவாரிப்பாகை அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து கோயில் வளாகத்தில் உள்ள அத்திவரதா் துயில் கொண்டுள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் தீா்த்தவாரி உற்சவத்துடன் வசந்த உற்சவம் நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.