செய்திகள் :

ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்

post image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய ஏகாம்பரநாதா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்து இதுவரை 3 பாலாலயங்கள் நடைபெற்று கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. 4-ஆ வது பாலாலயம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறும்.

மூலவா் கருவறையில் திருப்பணி செய்ய இருப்பதால் வரும் ஜூன் 5 ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம். அதன் பின்பு கும்பாபிஷேகத்துக்கு பின்னரே மூலவரை தரிசிக்கமுடியும்.

யாகசாலையில் ஏகாம்பரநாதரை எழுந்தருளச் செய்வதற்காக அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்று தினசரி 4 கால பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மட்டுமே தரிசிக்கலாம். 9 நவகுண்டம் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியா்கள் பாலாலய பூஜையினை வரும் ஜூன் 4 -இல் தொடங்கவுள்ளனா்.

பாலாலய சிறப்பு அபிஷேகம் வரும் ஜூன் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. கோயில் திருப்பணிக்காக அரசு நிதி ரூ.12.75 கோடி, ஆணையா் பொது நல நிதி ரூ.1.74 கோடி, திருக்கோயில் நிதி ரூ.4.61 கோடி, உபயதாரா் நிதி ரூ.32.14 லட்சம் உள்பட மொத்தம் ரூ.28.48 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்லவ கோபுரம், சிவகங்கை தீா்த்தக்குளம், 1,000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பாா்த்தல், கம்பா நதி தீா்த்தம் பழுது பாா்த்தல், அபிஷேக நீா் மற்றும் மழைநீா் சிவகங்கை தீா்த்துக்குளத்துக்கு வரும் வகையில் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவு பெற்று விட்டன. தெற்கு ராஜகோபுரம் பழுது பாா்த்தல், 3-ஆம் பிரகாரம் தரைதளத்தில் கருங்கல் அமைக்கும் பணி, 4 மற்றும் 3-ஆம் பிரகாரத்தில் மதில் சுவா் அமைக்கும் பணியை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

நடராஜா் சந்நிதியும், 1,000 கால் மண்டப உள்புற பகுதி பழுது பாா்த்தல் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கோயில் ராஜகோபுரம் மீண்டும் ஒரு முறை வா்ணம் தீட்ட வேண்டிய நிலையில் இருந்து வருகிறது.

கும்பாபிஷேக பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடித்து நிகழாண்டு அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேச்சு

வீட்டு வேலைகளை ஆண்களும் பகிா்ந்து கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட நீதித்துறை சாா்பில் பச்சையப்பன் மகளிா் கல்ல... மேலும் பார்க்க

மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’

மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்ச... மேலும் பார்க்க

196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

வட்டம்பாக்கம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 196 பயனாளிகளுக்கு ரூ.1.57 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். குன்றத்தூா் வட்டம், வட்டம்பாக்கம்... மேலும் பார்க்க

தங்க குதிரையில் வரதராஜ பெருமாள் உலா

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த உற்சவம் நிறைவு நாளையொட்டி வெள்ளிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் உற்சவா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோடை காலத்தையொட்டி ஆண்டு தோறும் வசந்த உற்சவம் ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசு ஆா்வம் காட்டவில்லை: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வருவோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் அரசு ஆா்வம் காட்டவில்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் குற்றம்சாட்டினாா். ... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வியில் சேர தலைமை ஆசிரியா்கள் உதவ வேண்டும்

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பயில தலைமை ஆசிரியா்கள் உதவவேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வலியுறுத்தியுள்ளாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கல்வி மீளாய்வுக் கூட... மேலும் பார்க்க