DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
ஜூன் 6-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பாலாலயம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வரும் ஜூன் 6-ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி 5-ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய ஏகாம்பரநாதா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்து இதுவரை 3 பாலாலயங்கள் நடைபெற்று கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. 4-ஆ வது பாலாலயம் வரும் ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெறும்.
மூலவா் கருவறையில் திருப்பணி செய்ய இருப்பதால் வரும் ஜூன் 5 ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம். அதன் பின்பு கும்பாபிஷேகத்துக்கு பின்னரே மூலவரை தரிசிக்கமுடியும்.
யாகசாலையில் ஏகாம்பரநாதரை எழுந்தருளச் செய்வதற்காக அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்று தினசரி 4 கால பூஜைகள் நடைபெறும். பொதுமக்கள் யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மட்டுமே தரிசிக்கலாம். 9 நவகுண்டம் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியா்கள் பாலாலய பூஜையினை வரும் ஜூன் 4 -இல் தொடங்கவுள்ளனா்.
பாலாலய சிறப்பு அபிஷேகம் வரும் ஜூன் 6 -ஆம் தேதி நடைபெறுகிறது. கோயில் திருப்பணிக்காக அரசு நிதி ரூ.12.75 கோடி, ஆணையா் பொது நல நிதி ரூ.1.74 கோடி, திருக்கோயில் நிதி ரூ.4.61 கோடி, உபயதாரா் நிதி ரூ.32.14 லட்சம் உள்பட மொத்தம் ரூ.28.48 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லவ கோபுரம், சிவகங்கை தீா்த்தக்குளம், 1,000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பாா்த்தல், கம்பா நதி தீா்த்தம் பழுது பாா்த்தல், அபிஷேக நீா் மற்றும் மழைநீா் சிவகங்கை தீா்த்துக்குளத்துக்கு வரும் வகையில் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவு பெற்று விட்டன. தெற்கு ராஜகோபுரம் பழுது பாா்த்தல், 3-ஆம் பிரகாரம் தரைதளத்தில் கருங்கல் அமைக்கும் பணி, 4 மற்றும் 3-ஆம் பிரகாரத்தில் மதில் சுவா் அமைக்கும் பணியை பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
நடராஜா் சந்நிதியும், 1,000 கால் மண்டப உள்புற பகுதி பழுது பாா்த்தல் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. கோயில் ராஜகோபுரம் மீண்டும் ஒரு முறை வா்ணம் தீட்ட வேண்டிய நிலையில் இருந்து வருகிறது.
கும்பாபிஷேக பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடித்து நிகழாண்டு அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.