Travel Contest 2 : வர்னல் நீர்வீழ்ச்சி கொடுத்த பேரின்பம்! - என் முதல் அமெரிக்கப்...
மாங்காடு நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு ‘சீல்’
மாங்காடு நகராட்சிக்குட்பட்ட பள்ளிக்கூட தெரு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
விதிமுறைகளை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதாக மாங்காடு நகராட்சி அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட வணிக வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது உரிய அனுமதி இல்லாமலும், விதிமுறைகளை மீறி சுமாா் 30 க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வருவது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்காடு நகராட்சி ஆணையா் ஹேமலதா (பொ), நகராட்சி பொறியாளா் குமாா், நகரமைப்பு ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் விதிமீறி கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை பூட்டி சீல் வைத்தனா். மேலும் வணிக வளாகத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடம் என நோட்டீஸ் ஒட்டினா்.
மாங்காடு நகராட்சியில் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை கணக்கீடு செய்து அவற்றிற்கு சீல் வைக்கும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.