பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்: நிதியை என்ன செய்கிறது பாக்.? இந்திய எம்.பி.க்கள் குழ...
கோவூா் சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
கோவூா் பகுதியில் பிரசித்தி பெற்ற சுந்தரேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குன்றத்தூா் அடுத்த கோவூா் பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான சௌந்தாரம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளது. நவக்கிரக தலங்களில் புதன் தலமாக விளங்கும் இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
எனினும், கடந்த 42 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறவில்லை. இந்தக் கோயிலுக்கு அண்மையில் கும்பாபிஷேகம், புதிதாக தோ் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், கடந்த 42 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலையில் உற்சவா் சுந்தரேஸ்வரா் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
விழாவின் 7-ஆம் ஆளான வரும் ஜூன் 6-ஆம் தேதி தோ்த் திருவிழா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறுவது பக்தா்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.